மஹா அவதார் பாபாஜியைப் பற்றியும் , அவரது சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு பொற்களஞ்சியம். இந்த புத்தகத்தை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். இவர் பாபாஜியின் ஒரு சீடர் ஆவார்.
மஹா அவதார் பாபாஜியின் மேன்மைகளும், லீலைகளும், அவருடைய கருணை மிகுந்த உள்ளமும்(காருண்ய ரூபா - கருணை மிகுந்தவர் ) இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
"Autobiography of Yogi " என்ற புத்தகத்தின் தமிழாக்கமே "ஒரு யோகியின் சுய சரிதம் " என்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.
நான் படித்த அனுபவத்தில் கூறுகிறேன், அவருடைய எழுத்துக்களில் கரைந்து போனேன். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டால் , நேரம் போவது தெரியாது. என்னை சுற்றி நடப்பது என்னவென்று என்னால் அறிய இயலாது. எந்த நிகழ்ச்சியை யோகானந்தர் விவரிக்கிறாரோ அந்த இடத்திலேயே சென்று பார்ப்பது போல ஒரு அனுபவம்.
காரணம் என் குருவை(பாபாஜியை) தேடும் ஏக்கத்தினால். ஒரு முறையாவது என் எதிரினில் தோன்ற மாட்டாரா என்ற ஒரு அவா. உன்னுடன் தான் நான் இருக்கிறேன் என்று பாபாஜி என்வாழ்வில் நடத்தும் லீலைகள். பாபாஜியை நினைத்த மாத்திரத்திலேயே, அவரிடம் இருந்து எனக்கு வரும் பதில்கள் .
யார் அறிவார் பாபாஜியின் லீலைகளை...
உணர்ந்து பாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும்.அவரின் சக்தியை தங்களால் தெரிந்து கொள்ள இயலும்.
"இது மாயை நிறைந்த உலகம்.
ஆசையே மாயை, மாயையே ஆசை (வாசனா ஆசைகள் )"
~மஹா அவதார் பாபாஜி

