மகான் சிவஸ்ரீ படே சாஹிபு பேரும் புகழும்
பெற்று எல்லோருடைய அன்புக்குப்பாத்திரமாகவும் விளங்கினார் . பொறாமை என்பது யாரைவிடும் ? ஒரு ஜமீன்தார் பொறாமையால் ஶ்ரீ படே சாஹிபு மேல் கோபம் கொண்டார் .காரணமில்லாமல் கோபம் ! அந்தச்சித்தரை எப்படியும் கொன்றுவிட வேண்டும்
என்று முடிவு செய்து பல ஆட்களைத்தயாரித்தார் .எல்லோர் கையிலும்
கூர்மையான கத்திகள் . சித்தரைத்தேடிக்கொண்டு அவர்கள் போனார்கள் ஆனால்
அவர்கள் கண்டது என்ன ? ஒரு மரத்தடியில் ஒரு கை கிடந்தது .அருகில்
கால், உடல் என்று துண்டுத்துண்டாககிடந்தது . யார்
இப்படிக்கிடப்பது? நம்ம சித்தர் ஶ்ரீ படேசாஹிபு தான் .
அவரை வெட்டப்போன கூலியாட்கள் ஸ்தம்பித்து நின்றார்கள் . "ஐயோ இப்போ என்ன
செய்வது ? ஜமீன்தாருக்கு என்ன பதில் சொல்வது ?நமக்கு முன்பாகவே வேறு
யாரோ இப்படிக்கண்டந்துண்டமாக வெட்டிப்போட்டுவிட்டார்களே நஎன்ன செய்ய?'
என்று குழம்பியபடி தரையில் ஒழுகியிருந்த இரத்தத்தைத் தங்கள் கத்தியில்
பூசிக்கொண்டார்கள். பின் ஜமீந்தாரிடம் " நாங்கள் வெற்றியுடன் காரியத்தை
முடித்துவிட்டோம் ' என்று கத்தியில் இருக்கும் இரத்தத்தைக்காட்டினார்கள்
.ஜமீன்தாரும் அங்குப்போக
" நானா வெட்டப்பட்டிருக்கிறேன் நானா துண்டு துண்டாகவா இருக்கிறேன்
?யார்சொன்னது ?என்று கேட்டபடியே ஶ்ரீ படே சாஹிபு எழுந்து நின்றார் .
அந்தச்சூழ்நிலை எப்படியிருக்கும் ? யோசித்துப்பாருங்கள் .
"தடால் "என்று அவர் காலடியில் விழுந்தார் மனதளவில் ஆடிப்போன ஜமீன்தார்






